அம்ம வாழி தோழி நம் மலை
|
|
அம்ம வாழி, தோழி நம் மலை
|
|
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த்
தட்டையின்,
|
|
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
|
|
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை
அமல்
|
5
|
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி,
|
|
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
|
|
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து,
|
|
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி
|
|
இன் இசை ஓரா இருந்தனமாக,
|
10
|
'மை ஈர் ஓதி மட நல்லீரே!
|
|
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து,
|
|
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
|
|
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என,
|
|
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட,
|
15
|
சொல்லிக் கழிந்த வல் விற் காளை
|
|
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து,
|
|
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,
|
|
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என,
|
|
அன்னை தந்த முது வாய் வேலன்,
|
20
|
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்;
|
|
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின்,
|
|
வினவின் எவனோ மற்றே 'கனல் சின
|
|
மையல் வேழ மெய் உளம்போக,
|
|
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
|
25
|
காட்டு மான் அடி வழி ஒற்றி,
|
|
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே?
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி
தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார்
|
|
உரை |
மேல் |