அயத்து வளர் பைஞ்சாய்
|
|
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
|
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்
வாய்,
|
|
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,
|
|
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன
|
5
|
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு
|
|
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
|
|
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,
|
|
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
|
|
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
|
10
|
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல,
|
|
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
|
|
ஆகம் அடைதந்தோளே வென் வேற்
|
|
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
|
|
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
|
15
|
கடவுள் எழுதிய பாவையின்,
|
|
மடவது மாண்ட மாஅயோளே.
|
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
மேல் |