அரம் போழ் அவ் வளை செறிந்த
|
|
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை
|
|
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
|
|
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன்
|
|
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி,
|
5
|
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே,
|
|
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக,
|
|
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை
|
|
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு,
|
|
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள,
|
10
|
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை
|
|
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன்
|
|
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை
|
|
கல் ஊர் பாம்பின் தோன்றும்
|
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?
|
தலைமகன் பிரிவின்கண்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
உரை |
மேல் |