அரம் போழ் அவ் வளை தோள் நிலை
|
|
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ,
|
|
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
|
|
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
|
|
ஆலி அன்ன வால் வீ தாஅய்,
|
5
|
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத்
|
|
தாது உறு குவளைப்போது பிணி அவிழ,
|
|
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க்
|
|
கடாஅம் மாறிய யானை போல,
|
|
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
|
10
|
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர,
|
|
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல்
|
|
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
|
|
முனிய அலைத்தி, முரண் இல் காலை;
|
|
கைதொழு மரபின் கடவுள் சான்ற
|
15
|
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின்
|
|
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
|
|
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
|
|
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
|
|
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
|
20
|
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
|
|
பீடு இல் மன்னர் போல,
|
|
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே.
|
தலைமகன் வினை முற்றி
மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச்
சொல்லியது. -பரணர்
|
|
உரை |
மேல் |