அரியற் பெண்டிர்
|
|
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட
|
|
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
|
|
அரி நிறக் கலுழி ஆர மாந்தி,
|
|
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர்,
|
5
|
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின்
|
|
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல்
|
|
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி,
|
|
கான யானை கவளம் கொள்ளும்
|
|
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார்
|
10
|
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி!
|
|
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து,
|
|
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய்,
|
|
வினை அழி பாவையின் உலறி,
|
|
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே!
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
வேம்பற்றூர்க் குமரனார்
|
|
உரை |
மேல் |