அருஞ் சுரம் இறந்த
|
|
'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள்
|
|
திருந்துவேல் விடலையொடு வரும்' என, தாயே,
|
|
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி,
|
|
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி,
|
5
|
உவந்து, இனிது அயரும் என்ப; யானும்,
|
|
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
|
|
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்,
|
|
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள்,
|
|
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய
|
10
|
நலம் புனை உதவியும் உடையன்மன்னே;
|
|
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல;
|
|
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி,
|
|
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல்,
|
|
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
|
15
|
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்;
|
|
மாறா வருபனி கலுழும் கங்குலில்,
|
|
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்,
|
|
எம் மனை முந்துறத் தருமோ?
|
|
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே?
|
மகட் போக்கிய நற்றாய்
சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
மேல் |