அருந் தெறல் மரபின்
|
|
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப,
|
|
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
|
|
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண்,
|
|
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த
|
5
|
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு
நினைந்து,
|
|
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்,
|
|
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்,
|
|
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி,
|
|
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
|
10
|
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்
|
|
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்,
|
|
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா,
|
|
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி
|
|
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர்
|
15
|
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து,
|
|
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே.
|
அல்லகுறிப்பட்டுப்
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - பரணர்
|
|
உரை |
மேல் |