அரும்பு முதிர் வேங்கை
|
|
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச்
|
|
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
|
|
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு
|
|
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை,
|
5
|
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன்
புனம்,
|
|
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
|
|
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ்
|
|
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
|
|
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ,
|
10
|
அறியா வேலற் தரீஇ, அன்னை
|
|
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி,
|
|
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம்,
|
|
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை
|
|
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத்
தோள்,
|
15
|
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய,
|
|
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ்
|
|
முயங்கல் இயைவதுமன்னோ தோழி!
|
|
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில்
|
|
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச்
|
20
|
சாந்த மென் சினை தீண்டி, மேலது
|
|
பிரசம் தூங்கும் சேண் சிமை
|
|
வரையக வெற்பன் மணந்த மார்பே!
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச்
சொல்லியது. - பேரிசாத்தனார்
|
|
உரை |
மேல் |