அருள் அன்று ஆக, ஆள்வினை
|
|
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
|
|
பொருள்" என வலித்த பொருள் அல்
காட்சியின்
|
|
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
|
|
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
|
5
|
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,
|
|
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
|
|
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
|
|
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
|
|
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல்,
|
10
|
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர்
வாய்,
|
|
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
|
|
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
|
|
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
|
|
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும்
|
15
|
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்
|
|
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என-
|
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
|
|
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
|
|
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்;
|
20
|
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி
|
|
ஆனா நோயை ஆக, யானே
|
|
பிரியச் சூழ்தலும் உண்டோ,
|
|
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?'
|
'பொருள்வயிற் பிரிவர்' என
வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்'எனத் தோழி
சொல்லியது. - மதுரைப்போத்தனார்
|
|
உரை |
மேல் |