அலமரல் மழைக் கண்
|
|
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின்
|
|
அலர் முலை நனைய, அழாஅல் தோழி!
|
|
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம்
|
|
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென,
|
5
|
ஊன் இல் யானை உயங்கும் வேனில்,
|
|
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின்,
|
|
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
|
|
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல்
|
|
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல்
|
10
|
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு,
|
|
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
|
|
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி
|
|
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ,
|
|
பொருள்வயின் நீடலோஇலர் நின்
|
15
|
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே.
|
பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார்
|
|
உரை |
மேல் |