அழியா விழவின்
|
|
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
|
|
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
|
|
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
|
|
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
|
5
|
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
|
|
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
|
|
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
|
|
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
|
|
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப்
பழிச்சிய
|
10
|
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்
|
|
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
|
|
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
|
|
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
|
|
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
|
15
|
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை,
|
|
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
|
|
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
|
|
கூடாமையின், நீடியோரே.
|
பிரிவிடை வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
மேல் |