அளிதோ தானே
|
|
அளிதோதானே; எவன் ஆவதுகொல்?
|
|
மன்றும் தோன்றாது; மரனும் மாயும்
|
|
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர்,
|
|
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்,
|
5
|
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய
|
|
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும்
|
|
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி,
|
|
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின்,
|
|
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
|
10
|
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய,
|
|
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே,
|
|
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என,
|
|
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு
|
|
நெருநலும் தீம் பல மொழிந்த
|
15
|
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே!
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
மேல் |