அளி நிலை பொறாஅது
|
|
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்,
|
|
விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
|
|
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ,
|
|
குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற
|
5
|
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள்,
|
|
கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல்,
|
|
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
|
|
முளிந்த ஓமை முதையல்அம் காட்டு,
|
|
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
|
10
|
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப,
|
|
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்,
|
|
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி,
|
|
பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல்,
|
|
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர,
|
15
|
பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம்
|
|
இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு
|
|
அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி
|
|
அன்ன ஆக' என்னுநள் போல,
|
|
முன்னம் காட்டி, முகத்தின் உரையா,
|
20
|
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி,
|
|
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
|
|
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத்
|
|
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
|
|
மோயினள் உயிர்த்த காலை, மா மலர்
|
25
|
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்
|
|
கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி
|
|
உழையம் ஆகவும் இனைவோள்
|
|
பிழையலள்மாதோ, பிரிதும் நாம் எனினே!
|
பொருள்வயிற் பிரியக்
கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லிச் செலவழுங்கியது. - பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
மேல் |