அறன்கடைப் படாஅ
|
|
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
|
|
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
|
|
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம்
|
|
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
|
5
|
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம்
|
|
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
|
|
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
|
|
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
|
|
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
|
10
|
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது
|
|
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
|
|
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
|
|
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
|
|
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
|
15
|
விரல் ஊன்று வடுவின் தோன்றும்
|
|
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
மேல் |