அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
|
|
அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
|
|
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
|
|
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
|
|
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
|
5
|
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்,
|
|
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு
பரட்டு
|
|
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
|
|
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
|
|
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
|
10
|
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து,
|
|
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர்
|
|
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
|
|
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
|
|
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட,
|
15
|
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல்
|
|
வான வரம்பன் நல் நாட்டு உம்பர்,
|
|
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல்,
|
|
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற,
|
|
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
|
20
|
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை
|
|
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி,
|
|
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப,
|
|
படு மழை உருமின் முழங்கும்
|
|
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்
வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. -
நக்கீரனார்
|
|
மேல் |