அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
|
|
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
|
|
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
|
|
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
|
|
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
|
5
|
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய
|
|
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
|
|
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
|
|
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
|
|
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே
|
10
|
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது,
|
|
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த
|
|
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி,
|
|
செய்து பின் இரங்கா வினையொடு
|
|
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே!
|
குறை வேண்டிப் பின் நின்ற
தலைமகனுக்குக் குறை நேர்ந்த
தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம
வண்ணக்கன் பேரி சாத்தனார்
|
|
மேல் |