அன்று அவண் ஒழிந்தன்றும்
|
|
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி
|
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
|
|
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,
|
|
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து
இசைக்கும்
|
5
|
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம்,
|
|
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,
|
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது,
|
|
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே
|
|
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
|
10
|
சேயிதழ் அனைய ஆகி, குவளை
|
|
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
|
|
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
|
|
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர்
அறல்
|
|
வெய்ய உகுதர, வெரீஇ, பையென,
|
15
|
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை
|
|
பூ வீ கொடியின் புல்லெனப் போகி,
|
|
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
|
|
இயங்காது வதிந்த நம் காதலி
|
|
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!
|
நெஞ்சினாற் பொருள்
வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன்,
தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக்
கழறியது. - பொருந்தில் இளங்கீரனார்
|
|
மேல் |