அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
|
|
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம்
படப்பைத்
|
|
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
|
|
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
|
|
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
|
5
|
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
|
|
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
|
|
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
|
|
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள்,
|
|
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை
|
10
|
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்
|
|
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச்
|
|
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த
நம்வயின்
|
|
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,
|
|
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து
|
15
|
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத்
|
|
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
|
|
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
|
|
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
|
|
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
|
20
|
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப்
|
|
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.
|
தலைமகன் இரவுக்குறி வந்தமை
அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -
ஊட்டியார்
|
|
மேல் |