அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
|
|
'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
|
|
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
|
|
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம்
|
|
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
|
5
|
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
|
|
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
|
|
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற
|
|
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
|
|
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
|
10
|
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
|
|
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
|
|
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,
|
|
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என
|
|
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
|
15
|
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி,
|
|
நாணி நின்றனெமாக, பேணி,
|
|
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
|
|
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
|
|
பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப்
|
20
|
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து,
|
|
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்
|
|
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே.
|
|
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
|
|
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன்
|
25
|
மகனே தோழி!' என்றனள்.
|
|
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே.
|
செவிலித்தாய்க்குத் தோழி
அறத்தொடு நின்றது. - தங்கால் முடக்
கொற்றனார்
|
|
மேல் |