அன்னை அறியினும் அறிக
|
|
அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
|
|
அம் மென் சேரி கேட்பினும் கேட்க;
|
|
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி,
|
|
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி,
|
5
|
கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல்
|
|
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்,
|
|
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும்,
|
|
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
|
|
இருந்தனமாக, எய்த வந்து,
|
10
|
'தட மென் பணைத் தோள் மட நல்லீரே!
|
|
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்;
|
|
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும்
இக்
|
|
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?'
|
|
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு,
|
15
|
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி,
|
|
'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த
|
|
கொழு மீன் வல்சி' என்றனம், இழுமென.
|
|
'நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
|
|
காணாமோ?' எனக் காலின் சிதையா,
|
20
|
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும்
|
|
என்னே குறித்த நோக்கமொடு, 'நன்னுதால்!
|
|
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
|
|
யான் 'பெயர்க' என்ன, நோக்கி, தான் தன்
|
|
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி
|
25
|
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே.
|
தோழி செவிலித்தாய்க்கு
அறத்தொடு நின்றது. - போந்தைப் பசலையார்
|
|
மேல் |