ஆடு அமைக் குயின்ற
|
|
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
|
|
கோடை அவ் வளி குழலிசை ஆக,
|
|
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
|
|
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
|
5
|
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
|
|
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
|
|
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
|
|
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
|
|
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
|
10
|
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
|
|
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
|
|
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
|
|
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
|
|
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
|
15
|
பலர்தில், வாழி தோழி! அவருள்,
|
|
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
|
|
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
|
|
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?
|
தோழிக்குத் தலைவி
அறத்தொடு நின்றது. - கபிலர்
|
|
உரை |
மேல் |