ஆய்நலம் தொலைந்த
|
|
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
|
|
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
|
|
வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
|
|
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
|
5
|
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
|
|
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
|
|
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
|
|
கான மட மரைக் கணநிரை கவரும்
|
|
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
|
10
|
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்
|
|
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
|
|
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
|
|
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
|
|
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
|
15
|
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண்
|
|
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
|
|
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
|
|
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
|
|
தலை நாள் அலரின் நாறும் நின்
|
20
|
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.
|
'பொருள்வயிற் பிரிந்து
நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற
தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித்
தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார்
மகனார் பரங்கொற்றனார்
|
|
உரை |
மேல் |