ஆள்வினைப் பிரிதலும் உண்டோ
|
|
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
|
|
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
|
|
கனவுக் கழிந்தனையவாகி, நனவின்,
|
|
நாளது செலவும், மூப்பினது வரவும்,
|
5
|
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்,
|
|
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை
|
|
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
|
|
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
|
|
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
|
10
|
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு,
|
|
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
|
|
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
|
|
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
|
|
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
|
15
|
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,
|
|
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
|
|
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
|
|
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
|
|
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
|
20
|
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி,
|
|
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
|
|
நம்மொடு நன் மொழி நவிலும்
|
|
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?
|
முன் ஒரு காலத்துப்
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள்
முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள்
கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
உரை |
மேல் |