ஆளி நல் மான் அணங்குடை
|
|
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
|
|
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
|
|
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
|
|
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
|
5
|
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர்
மண்டிலம்
|
|
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
|
|
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
|
|
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
|
|
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
|
10
|
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
|
|
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
|
|
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
|
|
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
|
|
முனை அரண் கடந்த வினை வல் தானை,
|
15
|
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய
|
|
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
|
|
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது
உயிர்த்து,
|
|
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
|
|
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
|
20
|
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன்
|
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
இளங்கௌசிகனார்
|
|
உரை |
மேல் |