ஆறு செல் வம்பலர்
|
|
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
|
|
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
|
|
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
|
|
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
|
5
|
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
|
|
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
|
|
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
|
|
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
|
|
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
|
10
|
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
|
|
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
|
|
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
|
|
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
|
|
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
|
15
|
நல் எழில் நெடு வேய் புரையும்
|
|
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
|
|
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர்
|
முதுகூத்தனார்
|
|
உரை |
மேல் |