இகுளை கேட்டிசின்
|
|
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி!
|
|
குவளை உண்கண் தெண் பனி மல்க,
|
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
|
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின்
|
5
|
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி,
|
|
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை,
|
|
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில்,
|
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
|
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,
|
10
|
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ,
|
|
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
|
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
|
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு
|
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன்
|
15
|
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி,
|
|
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்,
|
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட்
|
|
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி
|
|
நல் நிறம் மருளும் அரு விடர்
|
20
|
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத்,
தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்
சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார்
|
|
மேல் |