இருங் கழி மலர்ந்த
|
|
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்,
|
|
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
|
|
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
|
|
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
|
5
|
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை
|
|
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
|
|
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே,
|
|
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான்
|
|
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
|
10
|
அம் மா மேனி தொல் நலம் தொலைய,
|
|
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,
|
|
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
|
|
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை
|
|
இன்னாது உயங்கும் கங்குலும்,
|
15
|
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே.
|
பகற்குறிக்கண் வந்து
நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.
-சாகலாசனார்
|
|
மேல் |