இரு பெரு வேந்தர்
|
|
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து,
|
|
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும்
|
|
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என,
|
|
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
|
5
|
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை
|
|
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து,
|
|
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ
|
|
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
|
|
பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
|
10
|
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை
|
|
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள,
|
|
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்,
|
|
நல் மணல் வியலிடை நடந்த
|
|
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
மேல் |