இரும் பிடிப் பரிசிலர் போலக்
|
|
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று,
|
|
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை,
|
|
எழுதியன்ன திண் நிலைக் கதவம்
|
|
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென,
|
5
|
திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர்
|
|
இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள்
|
|
பொம்மல் ஓதி நீவிய காதலொடு,
|
|
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப,
|
|
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர்
|
10
|
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி
|
|
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
|
|
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ்
|
|
சுரம் இறந்து ஏகினும், நீடலர்
|
|
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே.
|
பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
|
|
மேல் |