இரும் பிழி மகாஅர்
|
|
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
|
|
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
|
|
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
|
|
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
|
5
|
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்,
|
|
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
|
|
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
|
|
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
|
|
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
|
10
|
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
|
|
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
|
|
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
|
|
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
|
|
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
|
15
|
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,
|
|
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
|
|
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
|
|
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
|
|
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
|
20
|
ஆதி போகிய பாய்பரி நன் மா
|
|
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
|
|
கல் முதிர் புறங்காட்டு அன்ன
|
|
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன்
சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - பரணர்
|
|
மேல் |