இரும் புலி தொலைத்த
|
|
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப்
|
|
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல்
|
|
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு
|
|
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி,
|
5
|
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க,
|
|
தனியன் வந்து, பனி அலை முனியான்,
|
|
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
|
|
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
|
|
அசையா நாற்றம் அசை வளி பகர,
|
10
|
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக்
|
|
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்,
|
|
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு,
|
|
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி,
|
|
உருவச் செந் தினை நீரொடு தூஉய்,
|
15
|
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ!
|
|
என் ஆவது கொல்தானே பொன் என
|
|
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
|
|
மணி நிற மஞ்ஞை அகவும்
|
|
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
|
இரவுக்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாக, தலைமகட்குச்
சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை
அறுவை வாணிகன் இளவேட்டனார்
|
|
மேல் |