இரு விசும்பு இவர்ந்த
|
|
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
|
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
|
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
|
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
|
5
|
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,
|
|
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
|
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
|
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
|
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
|
10
|
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய,
|
|
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
|
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
|
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
|
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
|
15
|
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப,
|
|
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
|
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
|
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
|
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என,
|
20
|
நம் நோய் தன்வயின் அறியாள்,
|
|
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
|
|
மேல் |