இருள் கிழிப்பது போல்
|
|
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
|
|
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
|
|
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
|
|
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
|
5
|
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
|
|
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
|
|
ஆறே அரு மரபினவே; யாறே
|
|
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
|
|
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
|
10
|
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,
|
|
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
|
|
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
|
|
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
|
|
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
|
15
|
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்
|
|
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
|
|
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
|
|
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
|
|
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
|
20
|
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்
|
|
ஆனா அரும் படர் செய்த
|
|
யானே, தோழி! தவறு உடையேனே.
|
தலைமகன் இரவுக் குறிக்கண்
சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச்
சொல்லியது; தோழி தலைமகட்குச்
சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார்
மகனார் கடலனார்
|
|
மேல் |