இருள் படு நெஞ்சத்து
|
|
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
|
|
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல்
|
|
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல்
|
|
யானும் அறிவென்மன்னே; யானை தன்
|
5
|
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து,
|
|
இன்னா வேனில் இன் துணை ஆர,
|
|
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட,
|
|
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம்
|
|
அரிய அல்லமன், நமக்கே விரி தார்
|
10
|
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன்
|
|
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ,
|
|
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால்,
|
|
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து
யாத்த
|
|
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின்
|
15
|
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு,
|
|
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய,
|
|
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்,
|
|
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
|
|
வார் உறு கவரியின் வண்டு உண விரிய,
|
20
|
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,
|
|
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
|
|
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப்
|
|
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய்
|
|
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று
|
25
|
அமிழ்தம் ஊறும் செவ் வாய்,
|
|
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!
|
தலைமகன் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு
அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார்
|
|
மேல் |