இலங்கு வளை நெகிழச்
|
|
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும்,
|
|
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய
|
|
வலம் படு முரசிற் சேரலாதன்
|
|
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
|
5
|
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
|
|
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
|
|
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
|
|
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
|
|
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
|
10
|
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன
|
|
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள்
|
|
தங்கலர் வாழி, தோழி! செங் கோற்
|
|
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர்
|
|
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி,
|
15
|
கல்லா மழவர் வில் இடம் தழீஇ,
|
|
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
|
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
|
|
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.
|
பிரிவிடை ஆற்றாளாகிய
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
|
|
மேல் |