இழை நிலை நெகிழ்ந்த
|
|
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,
|
|
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
|
|
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
|
|
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
|
5
|
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,
|
|
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,
|
|
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,
|
|
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,
|
|
நன்று புறமாறி அகறல், யாழ நின்
|
10
|
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?
|
|
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி,
|
|
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
|
|
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,
|
|
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,
|
15
|
நயன் அறத் துறத்தல் வல்லியோரே,
|
|
நொதுமலாளர்; அது கண்ணோடாது,
|
|
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
|
|
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
|
|
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
|
20
|
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்
|
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
|
|
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
|
|
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
|
|
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
|
25
|
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!
|
காமம் மிக்க கழி படர்
கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள்
தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு
புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார்
|
|
மேல் |