இனிப் பிறிது உண்டோ
|
|
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என
|
|
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம்
|
|
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும்,
|
|
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க,
|
5
|
ஐய ஆக வெய்ய உயிரா,
|
|
இரவும் எல்லையும் படர் அட வருந்தி,
|
|
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப,
|
|
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய,
|
|
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள்
புரிந்து,
|
10
|
வருவர் வாழி, தோழி! பெரிய
|
|
நிதியம் சொரிந்த நீவி போலப்
|
|
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை,
|
|
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர்
|
|
வசி படு புண்ணின் குருதி மாந்தி,
|
15
|
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல,
|
|
இல் வழிப் படூஉம் காக்கைக்
|
|
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை
பாடிய பெருங்கடுங்கோ
|
|
மேல் |