ஈயல் புற்றத்து
|
|
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
|
|
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
|
|
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
|
|
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,
|
5
|
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய
|
|
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
|
|
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
|
|
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு
|
|
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,
|
10
|
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய,
|
|
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
|
|
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
|
|
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
|
|
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
|
15
|
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால்
|
|
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,
|
|
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,
|
|
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழிக்குச் சொல்லுவாளாய்த்
தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார்.
|
|
மேல் |