ஈன்று புறந்தந்த
|
|
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
|
|
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப
|
|
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,
|
|
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்
|
5
|
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த
|
|
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
|
|
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,
|
|
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
|
|
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
|
10
|
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம்
|
|
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து
அணிந்து,
|
|
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன்
|
|
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல
|
|
துஞ்சா முழவின் கோவற் கோமான்
|
15
|
நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை,
|
|
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
|
|
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு,
|
|
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!
|
மகட்போக்கிய நற்றாய்
தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற்
கீரத்தனார்
|
|
மேல் |