உய் தகை இன்றால் தோழி
|
|
உய் தகை இன்றால் தோழி! பைபய,
|
|
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும்
|
|
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்;
|
|
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர்
நிறைக்
|
5
|
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்,
|
|
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல்,
|
|
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு,
|
|
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி,
|
|
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
|
10
|
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன்,
|
|
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்,
|
|
யாணர் வேனில்மன், இது
|
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே?
|
பிரிவின்கண் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார்
|
|
மேல் |