உயிரினும் சிறந்த ஒண் பொருள்
|
|
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
|
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என
|
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
|
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி,
|
5
|
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்,
|
|
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
|
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற,
|
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
|
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
|
10
|
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள்
|
|
கான யானை வெண் கோடு சுட்டி,
|
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
|
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
|
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து
|
15
|
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக்
|
|
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
|
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
|
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
|
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
|
20
|
அம் மா அரிவை ஒழிய,
|
|
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே.
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு
அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |