உரும் உரறு கருவிய
|
|
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
|
|
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்,
|
|
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
|
|
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
|
5
|
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
|
|
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என
|
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
|
|
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
|
|
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
|
10
|
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
|
|
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
|
|
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
|
|
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
|
|
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
|
15
|
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு,
|
|
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
|
|
எந்தையும் இல்லன் ஆக,
|
|
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி செவிலித்தாய்க்குச்
சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச்
சொல்லியது. - கபிலர்
|
|
மேல் |