உலகு உடன் நிழற்றிய
|
|
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
|
|
கடல் போல் தானை, கலிமா, வழுதி
|
|
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
|
|
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே
|
5
|
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,
|
|
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
|
|
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
|
|
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து,
|
|
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர்
|
10
|
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை
|
|
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
|
|
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
|
|
தண்டலை கமழும் கூந்தல்,
|
|
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக்
காமக்கணி நப்பாலத்தனார்
|
|
மேல் |