உவக்குநள்ஆயினும்
|
|
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும்,
|
|
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய்
|
|
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்,
|
|
'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள்
|
5
|
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு
அறியேன்,
|
|
'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும்
|
|
யான் இவ் வறு மனை ஒழிய, தானே,
|
|
'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
|
|
எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால்
|
10
|
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற,
|
|
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான்
|
|
அன்னேன் அன்மை நன் வாயாக,
|
|
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி
|
|
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
|
15
|
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,
|
|
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த,
|
|
நுனை குழைத்து அலமரும் நொச்சி
|
|
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே!
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கபிலர்
|
|
மேல் |