உவர் விளை உப்பின்
|
|
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
|
|
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
|
|
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக்
|
|
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ?
|
5
|
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள,
|
|
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
|
|
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி,
|
|
' ''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
|
|
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும்,
|
10
|
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின்
|
|
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்' என,
|
|
சிறிய விலங்கினமாக, பெரிய தன்
|
|
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி,
|
|
'யாரீரோ, எம் விலங்கியீஇர்?' என,
|
15
|
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
|
|
சில் நிரை வால் வளைப் பொலிந்த
|
|
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே!
|
தலைமகன் பாங்கற்குச்
சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம்
ஆம். - அம்மூவனார்
|
|
மேல் |