உழுந்து தலைப்பெய்த
|
|
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
|
|
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
|
|
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
|
|
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
|
5
|
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
|
|
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
|
|
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
|
|
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
|
|
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
|
10
|
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,
|
|
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
|
|
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
|
|
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
|
|
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என,
|
15
|
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
|
|
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
|
|
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
|
|
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
|
|
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,
|
20
|
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
|
|
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
|
|
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
|
|
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
|
|
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்
|
25
|
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,
|
|
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
|
|
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
|
|
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
|
|
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
|
30
|
மடம் கொள் மதைஇய நோக்கின்,
|
|
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.
|
வாயில் மறுத்த தோழிக்குத்
தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி
இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது
சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர்
கிழார்
|
|
மேல் |