உழுவையொடு உழந்த
|
|
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
|
|
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல்
|
|
ஆலி அழி துளி பொழிந்த வைகறை,
|
|
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்,
|
5
|
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ,
|
|
கலம் சுடு புகையின் தோன்றும் நாட!
|
|
இரவின் வருதல் எவனோ? பகல் வரின்,
|
|
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
|
|
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து,
|
10
|
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி,
|
|
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத்
|
|
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
|
|
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட,
|
|
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய
|
15
|
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை,
|
|
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன்,
ஊர்க்கே.
|
இரவு வருவானைப் 'பகல் வருக'
என்றது. - பிசிராந்தையார்
|
|
மேல் |