உள் ஆங்கு உவத்தல்
|
|
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
|
|
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
|
|
வருவர் வாழி, தோழி! அரச
|
|
யானை கொண்ட துகிற் கொடி போல,
|
5
|
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி
|
|
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர,
|
|
மழை என மருண்ட மம்மர் பல உடன்
|
|
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை
|
|
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
|
10
|
அத்தக் கேழல் அட்ட நற் கோள்
|
|
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப,
|
|
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி,
|
|
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
|
|
புண் தேர் விளக்கின், தோன்றும்
|
15
|
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
மேல் |