உளைமான் துப்பின்
|
|
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும்
புனத்துக்
|
|
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;
|
|
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு
|
|
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
|
5
|
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி
|
|
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;
|
|
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
|
|
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென
|
|
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
|
10
|
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப,
|
|
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
|
|
காவலர் அறிதல் ஓம்பி, பையென
|
|
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
|
|
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
|
15
|
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி!
|
|
இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன்
|
|
நல்காமையின் அம்பல் ஆகி,
|
|
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
|
|
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே?
|
இரவுக்குறிக்கண்
சிறைப்புறமாக, தோழிக்குச்
சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. -
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன்
|
|
மேல் |