ஊரும் சேரியும் உடன் இயைந்து
|
|
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,
|
|
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,
|
|
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,
|
|
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,
|
5
|
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
|
|
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
|
|
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,
|
|
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்
|
|
காணலாகா மாண் எழில் ஆகம்
|
10
|
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே
|
|
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின்,
|
|
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும்,
|
|
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்,
|
|
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து,
|
15
|
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்,
|
|
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை
|
|
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
|
|
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து,
|
|
யாணர்த் தண் பணை உறும் என, கானல்
|
20
|
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள்
|
|
நல் எழில் சிதையா ஏமம்
|
|
சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே.
|
இரவுக்குறி வந்து நீங்கும்
தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது.
-மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |